நிலக்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் பறிமுதல்!

நிலக்கோட்டை அருகே குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி சிவன் கோயில் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால்…

நிலக்கோட்டை அருகே குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி சிவன் கோயில் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்தின் உள்ளே 12 சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந்த சிலைகளை  பறிமுதல் செய்தனர். மேலும் நீரேற்று நிலையத்திற்குள் சிலைகளை கொண்டு வந்து வைத்தது யார்? இதில் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற அடிப்படையில்  போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சிலைகளை யாரும் சொந்தம் கொண்டாத நிலையில் சிலைகளை நிலக்கோட்டை வட்டாட்சியரிம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இந்த சிலைகளை குறித்து நிலக்கோட்டை வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்ட தகவலில் சிலைகள் அனைத்தும் சிமெண்டால் செய்யப்பட்டது என அறிப்பட்டது.

—அனகா காளமேகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.