36.1 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

10 முறை கொலை செய்ய முயற்சி; காதலனுக்கு விஷம் கொடுத்த விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்

கேரளாவில் காதலனை கொலை செய்த வழக்கு விசாரணையில் 10 முறை கொலை செய்ய முயற்சி செய்ததாக போலீசாரிடம் க்ரிஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாறசாலை பகுதியில் காதலி கிரிஷ்மாவால்
காதலன் ஷரோன்ராஜ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலைக்கு பின் தடையத்தை அழித்ததாக கிரிஷ்மாவின் தாய் சிந்து மற்றும் தாய்மாமன் நிர்மல் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களை நிகழ்விடம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், ஷாரோனை கொலை செய்ய பயன்படுத்திய விஷ பாட்டில்கள் க்ரீஷ்மாவின் வீட்டின் பின்புறத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஷாரோனை கொலை செய்தது தான் என க்ரீஷ்மா போலீசாரிடம் ஒத்துக்கொண்ட நிலையில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா குற்றப்பிரிவு போலீஸ் காவலில் க்ரீஷ்மாவை இன்று ஷாரோன் படித்த
கன்னியாகுமரி மருத்துவ மிஷன் சி.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் க்ரீஷ்மா படித்த திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரிக்கும் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.


கடந்த இரண்டு மாதத்திற்கு முன் ஷாரோன் படிக்கும் நெய்யூரில் உள்ள கன்னியாகுமரி
மருத்துவ மிஷன் சி.எஸ்.ஐ மருத்துவமனை சென்ற க்ரீஷ்மா அவரை கழிப்பறைக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருப்பது போல் முதல் முறையாக குளிர் பானத்தில் காய்ச்சலுக்கான மாத்திரைகளை அதிக அளவு கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றதாகவும், ஆனால் அதில் சாரோனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தொடர்ந்து 2-மாதத்தில் அந்த மருத்துவமனை தனது கல்லூரி மற்றும் சொகுசு
விடுதிகளுக்கும் அழைத்து சென்று பத்து முறை இதேப்போல் மாத்திரைகளை குளிர் பானத்தில் கலந்து கொடுத்து முயற்சித்ததாகவும், இதற்கு தேவையான மாத்திரைகள் குளிர் பானங்களை திருவிதாங்கோடு பகுதியில் உள்ள ஒரு மருந்தகத்தில் வாங்கியம் ஆனால் 10-முறையும் ஷாரோன் பாதிப்பின்றி தப்பியுள்ளார். இதன்பின்னர் தான், ஷாரோனை வீட்டிற்கு அழைத்து சென்று கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்

இதனை தொடர்ந்து கேரளா போலீசார் க்ரீஷ்மா சாரோனை எங்கெங்கு அழைத்து சென்று குளிர் பானத்தில்மாத்திரைகளை கலந்து கொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டாரோ என மேலும் திற்பரப்பு நீர் விழ்ச்சி அருகே அறை எடுத்து தங்கிய தங்கும் விடுதி மற்றும் குழித்துறை பழைய பாலம் பகுதியில் குளிர் பானம் குடித்த இடம் போன்ற பகுதிகளுக்கு அழைத்து சென்று இடங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading