விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், ரத்தம் உறையும் குளிரிலும், சித்தம் உறையாத விவசாயிகளின் போராட்டத்தை கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன எனக் கூறியுள்ளார். மேலும், விவசாயிகள் போராட்டத்தை நீளவிடக்கூடாது, என தெரிவித்த வைரமுத்து, அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும்போதே, மத்திய அரசும் மனம் திறக்க வேண்டுமென்று, மக்கள் விரும்புகிறார்கள், என குறிப்பிட்டுள்ளார்.







