குஜராத்தில் மூளைசாவடைந்த 14 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு சிகிச்சை அளித்தபோது, அவரின் மூளை இறந்துவிட்டது. இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தனர். இதனடிப்படையில், சிறுமியின் கண்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகியவை தானம் செய்யப்பட்டன. பின்பு சிறுமியின் உடல் உறுப்புகள் டெல்லி, மும்பை, அகமதாபாத் ஆகிய விமானங்களில் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.







