மாமேதை கார்ல் மார்க்ஸ் 205-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
கம்யூனிச மாமேதை கார்ல் மார்க்ஸின் 205 -வது பிறந்த தினமான மே 5ல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக 2500 -க்கும் மேற்பட்டோர் பிரம்மாண்ட செம்படை பேரணி நடத்தினர்.கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர் .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திண்டுக்கல் போம்பூரில் சிஐடியூ மாவட்ட அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை மாணவர்கள், வாலிபர்கள், மாதர் சங்கங்களை சேர்ந்தவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து செங்கொடி ஏந்தி மிடுக்காக நடைபோட்டு முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடத்தி மணிக்கூண்டு பகுதி வந்தனர்.
கார்ல் மார்க்ஸ் -ன் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையிலும் , மத்திய மாநில
அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கினை கண்டிக்கும் விதமாகவும் பேரணி
நடைபெற்றது. பேரணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களான முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மதுக்கூர் ராமலிங்கம், மாநில குழு உறுப்பினர் பாண்டி மற்றும் மாவட்டசெயலாளர் சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.