பொது வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் அனைத்து காவலரும் பணிக்கு வரவேண்டும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தியாவசிய தேவைகள் பாதிப்படையாமல் இருக்கவும், அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.







