புதுச்சேரியில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரதநாட்டிய
கலைஞர்கள் உடுக்கை வாத்தியம் இசைத்துக்கொண்டே ஆனந்த தாண்டவம் ஆடி புதிய உலக சாதனை படைத்தனர்.
பாரம்பரிய இசைக் கருவியான உடுக்கையை பயன்படுத்தி அதனை
இசைத்துக் கொண்டே பரத நாட்டியம் ஆடும் கலையை உலக அளவில் அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை மற்றும் சங்கமம் குளோபல்அகாடமி சார்பில் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முதல்வர் ரங்கசாமி மற்றும் பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தனர். இந்த சாதனை நிகழ்ச்சியில் மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள்
கலந்து கொண்டு உடுக்கை வாத்தியம் இசைத்துக்கொண்டே தொடந்து 8 நிமிடம் நடனமாடி புதிய உலக சாதனை படைத்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த புதிய உலக சாதனை நிகழ்ச்சி யுனிக் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் பதிவு
செய்யப்பட்டது.







