கேரளாவில் வேகமாக பரவிவரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக, தமிழக கேரள எல்லை சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள நாடுகாணி, பாட்டவயல். சோலாடி உள்ளிட்ட 8 சோதனைச் சாவடிகளில் மருத்துவ குழுக்கள் அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படுதாகவும், மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
நாமக்கல்லில் நடைபெற்ற பறவை காய்ச்சல் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மெகராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பறவை காய்ச்சல் தடுப்புபணிகளுக்காக, மாவட்டத்தில் 45 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழுவினர் தினமும் கோழிப்பண்ணைகளை ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறினார்.







