தேசிய அளவிலான கராத்தே போட்டி – தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 4 பதக்கங்கள் வென்று சாதனை!

சென்னை தாம்பரத்தை சேர்ந்த 4 மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 2 தங்கம் பதக்கம் உள்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தேசிய அளவிலான கராத்தே போட்டி…

சென்னை தாம்பரத்தை சேர்ந்த 4 மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 2 தங்கம் பதக்கம் உள்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா,  அந்தமான் உள்ளிட்ட இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் தாம்பரம் கிக்ஸ் ஆண்ட் பஞ்சஸ் கராத்தே பயிற்சி மையத்தை சேர்ந்த சென்சாய் கார்த்திகேயன் தலைமையில் 4 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கத்தா பிரிவில் 6-ம் வகுப்பு மாணவர் வசீகரன், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஹரி,
நிக்கிலேஷ் ஆகிய இருவர் தங்கப்பதக்கமும், யு.கே.ஜி. மாணவர் சஞ்சய் ஷிவ்
மற்றும் 5-ம் வகுப்பு மாணவர் சிவபிரியன் ஆகியோர் வெள்ளிப்பதக்கமும்
வென்று சாதனை படைத்துள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களுக்கு கிக்ஸ் ஆண்ட் பஞ்சஸ் பயிற்சி மையத்தின் இயக்குநர் சென்சாய் கார்த்திகேயன், சென்சாய் வனிதா கார்த்திகேயன் பாராட்டுகளை
வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.