ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தம்பதியை கொலை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். புள்ளாபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமசாமி மற்றும் அவரது மனைவி அருக்காணி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
விசாரணையில், இளைஞர்கள் மதுபோதையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை தட்டிக்கேட்டதால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய கிருபா சங்கர், சூர்யா, சாமிநாதன் ஆகியோரை கைது செய்த போலீசார், குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்!







