அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக உள்ள தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளர்.
நாகை மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார். நாகை அடுத்த வடக்கு பொய்கை நல்லூர், சிக்கல், பெருங்கடம்பனூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் இந்த கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கிளினிக்கை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் உலகத்திற்கே எடுத்துக்காட்டாக தமிழகம் உள்ளதாக தெரிவித்தார்.







