தமிழகத்தில் இனி வாரிசு அரசியலுக்கு இடமில்லை! – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் இனி வாரிசு அரசியலுக்கு இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவை சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுக்கரை மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம்…

தமிழகத்தில் இனி வாரிசு அரசியலுக்கு இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவை சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுக்கரை மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், விவசாயிகள் பாதிக்கப்படும்பொழுது அதிமுக அரசு துணை நிற்கும் என தெரிவித்தார். தேர்தல் வரும்போது மட்டும்தான் ஸ்டாலினை பார்க்க முடியும் என்றும் அவர் சாடினார்.

பொங்கல் பரிசாக 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கொடுப்பதை நிறத்துவதற்கு நீதிமன்றத்தில் ஸ்டாலின் தடையாணை பெற்றதாக குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, தடைகளை தகர்த்தெறிந்து ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply