எனக்கு சாதி சாயம் பூச வேண்டாம்: அமைச்சர் செல்லூர் ராஜூ

தேர்தல் நேரத்தில் யாரும் தனக்கு சாதி சாயம் பூச வேண்டாம் என அமைச்சர் செல்லூர் ராஜு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை குறித்து பேசும் போது, குறிப்பிட்ட…

தேர்தல் நேரத்தில் யாரும் தனக்கு சாதி சாயம் பூச வேண்டாம் என அமைச்சர் செல்லூர் ராஜு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை குறித்து பேசும் போது, குறிப்பிட்ட சமுதாயத்தை மேற்கோள்காட்டி பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பரவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் யதார்த்தமாக பழமொழியை குறிப்பிட்டு பேசியதாகவும், தான் ஒரு போதும் சாதி, மதம் பார்ப்பதில்லை என விளக்கம் அளித்தார்.

குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு தனது பேச்சு வேதனை ஏற்படுத்தியிருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply