உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 5 நாட்கள் நடைபெற்ற 125 வது மலர்க் கண்காட்சியை தொடர்ந்து வரும் மே 30 ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை பார்த்து ரசிக்கும் வகையிலும், 35 ஆயிரம் பூந்தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தோட்டக்கலை துறை மற்றும் சுற்றுலாத் துறை மூலம் மலர்க்கண்காட்சி மற்றும் கோடை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல் இந்த ஆண்டு மே மாத கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கடந்த ஆறாம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கி கடந்த 13ம் தேதி உதகை ரோஜா பூங்காவில் மூன்று நாட்கள் ரோஜா கண்காட்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கூடலூர் 12-வது வாசனை திரவிய கண்காட்சியும் நடைபெற்றது.
இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 125 வது மலர்கள் காட்சியை கடந்த 19ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைபெற்றது 125 ஆவது மலர் கண்காட்சியின் சிறப்பம்சமாக 80 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு தோகையை விரித்தாடும் வண்ணமயில், உதகை 200, சிறுத்தை, கரடி, வண்ணத்துப்பூச்சி, மீண்டும் மஞ்சப்பை போன்ற அலங்கார சிற்பங்கள் கார்னேசன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனை கண்டு ரசிக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து மலர்கண்காட்சியினை கண்டு ரசித்தனர். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 5 நாட்கள் நடைபெற்ற இந்த மலர்க்கண்காட்சியினை 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.
இந்நிலையில் உதகை தாவரவியல் பூங்காவில் ஐந்து நாட்கள் நடைபெற்ற 125 வது மலர் கண்காட்சி நிறைவடைந்த நிலையில், எதிர்வரும் மே 30 ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை பார்த்து ரசிக்கும் வகையிலும், 35 ஆயிரம்
பூத்தொட்டிகளில் பல லட்சம் வண்ண மலர்கள் மலர் மாடத்தில் தொடர்ந்து காட்சிக்கு வைக்கப்படும் என தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.