இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,45,384 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.32 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 794 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 1,68,436 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 77,567 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 1.19 கோடி பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 9.80 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,90,859 ஆக அதிகரித்துள்ளது.