அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை!

அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே புலிகுத்தியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வராஜ்…

அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே புலிகுத்தியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வராஜ் என்ற 23 வயது இளைஞர் குடிபோதையில், அரசு பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் கற்களை கொண்டு பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சேர்ந்து சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வராஜை கைது செய்தனர். இதுகுறித்து தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றதில் நடைபெற்ற வழக்கு விசாரணையை தொடர்ந்து, நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி செல்வராஜுக்கு 4 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply