இந்த சகாப்தத்தில் அனைத்து வகையான ஆட்டங்களிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மிகச்சிறந்த வீரர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைகெல் வாகன் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டெஸ்ட், டி20 உள்ளிட்ட போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரின்போது மனைவியில் பிரசவம் காரணமாக இந்தியா திரும்பவுள்ளார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்பாக தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கெல் வாகன், எனது மகன் விராட் கோலியின் ரசிகன். விராட் களத்தில் இறங்கும் வேளையில் தூங்கிக்கொண்டிருந்தால் தன்னை எழுப்புங்கள் என தனது மகன் கூறுவான் என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விராட் கோலி குறித்து நான் கவலைப்படாத ஒரு விஷயம் அவரது பேட்டிங். அவரது பேட்டிங் குறித்து எந்த கவலையும் இல்லை. அவர் ஒரு அற்புதமான வீரர், இந்த சகாப்தத்தில் அனைத்து வகையான ஆட்டங்களிலும் சிறந்த வீரர் அதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்தார்.
அவர் இல்லாமல் இந்தியா அனி விளையாடப்போகும் மூன்று டெஸ்ட் போட்டிகளை பற்றி நான் கவலைப்படுகிறேன். விராட் கோலி என்ற நபர் இல்லாமல் இந்தியா அந்த டெஸ்ட்களை வெல்ல முடியும் என்பதை நான் நம்பவில்லை. அந்த டெஸ்ட் அணிக்கு அவர் அவ்வளவு முக்கியமானவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.