28.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

பொள்ளாச்சியில் 65 வயது மதிக்க தக்க மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 27 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

 

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஏரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர் தனது வீட்டிற்கு அருகே மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்ற 27 வயது இளைஞர் அந்த வழியாக சென்றுள்ளார். மூதாட்டி தனியாக நின்று மாடு மேய்த்து கொண்டிருப்பதை நாகராஜ் பார்த்துள்ளார். பின்னர் நீண்ட நேரம் அங்கேயே நின்று மூதாட்டியை அடைய வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

உடனே மூதாட்டியின் அருகில் சென்று அவரை கீழே தள்ளி விட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் நாகராஜ் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் மயங்கிய நிலையில் கிடந்த மூதாட்டியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அக்கம் பக்கத்தினர் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், மூதாட்டியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நாகராஜை கைது செய்தனர். மூதாட்டியை 27 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading