திருக்கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்களில் காசோலை மூலமாகவும் வாடகை மற்றும் குத்தகை தொகையினை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இணையவழி முறையில் திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதியை 08.10.2021 அன்று தொடங்கி வைத்திருந்தார். அதன்பின்னர், இணையம் மூலம் வாடகை-குத்தகை செலுத்த இயலாத குத்தகைதாரர்-வாடகைதாரர்கள் வழக்கம் போல் திருக்கோயில் அலுவலகத்தில் தொகையை செலுத்தி கணினி மூலம் ரசீதினை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, வாடகை மற்றும் குத்தகை தொகையினை காசோலை மூலமாகவும் செலுத்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காசோலை மூலம் வசூல் செய்யும்பொழுது, வாடகைதாரர்கள் தங்களால் வழங்கப்படும் காசோலைக்குரிய தொகை வங்கி கணக்கில் உள்ளது எனவும், வங்கி கணக்கில் போதிய தொகை இல்லாமல் காசோலை திருப்பப்பட்டால் வாடகைதாரர்கள் மேல் எடுக்கப்படும் குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவதற்கான சம்மத கடிதத்துடன் காசோலையை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகை-குத்தகை தொகையை வசூல் செய்யும் பொழுது, அன்றைய தேதி மட்டுமே குறிப்பிட்டு காசோலை பெற வேண்டும். எக்காரணம் கொண்டும் பின் தேதியிட்ட காசோலை பெறக்கூடாது எனவும், காசோலை நிபந்தனையுடன் பெற்றுக்கொள்ளும் சமயம், எந்தவொரு காரணத்திற்காகவும், வாடகை-குத்தகை தொகை திருக்கோயில் கணக்கில் சேரும் வரை இரசீது வழங்கப்படுதல் கூடாது எனவும் அலுவலர்களுக்கு அறிவுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனிவருங்காலங்களில் வாடகை மற்றும் குத்தகை தொகையினை கணினி வழி மூலமாகவும், காசோலை மூலமாகவும் தொகையினை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.