கேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

கேரளாவில் இன்று மற்றும் நாளை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என 6 மாவட்டங்களுக்கு இந்தியா வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த 24…

கேரளாவில் இன்று மற்றும் நாளை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என 6 மாவட்டங்களுக்கு இந்தியா வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி எரிமையூரில் அதிகபட்சமாக 5 சென்டிமீட்டர் மழையும், போத்துண்டி அணை மற்றும் நிலம்பூரில் தலா 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பொன்னானி மற்றும் குப்பட்டியில் தலா 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, இன்று கேரளாவின் எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, திரிச்சூர், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை (ஜூலை 14-ம் தேதி) இடுக்கி, கண்ணூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.