தமிழகம் செய்திகள்

பட்டுக்கோட்டையில் 1,000 மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்!

உலக வன தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் விதை அறக்கட்டளை சார்பில் ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் நடைபெற்றது. 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பேருந்து நிலைய பகுதியில், இத் திட்டத்தை நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா துவங்கி வைத்தார். மேலும் அப்பகுதி பொதுமக்களுக்கு மா, பலா, கொய்யா போன்ற மரகன்றுகளையும் வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதை தொடர்ந்து இந் நிகழ்வில் காவல்துறையினர் , நகராட்சி அதிகாரிகள், மற்றும்  சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்று காடுகள் பாதுகாப்பு குறித்து உறுதி மொழி எடுத்தனர். இதையடுத்து அப்பகுதி பொது மக்கள்  நிகழ்வில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.

–கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதை இந்த தீர்ப்பு உணர்த்துகிறது – முதலமைச்சர் வரவேற்பு

NAMBIRAJAN

கொரோனா தடுப்புப் பணி.. தாராளமாக நிதி வழங்க முதலமைச்சர் வேண்டுகோள்!

Halley Karthik

சற்று நேரத்தில் தொடங்குகிறது தேர்தல் வாக்குப்பதிவு

Janani