முடங்கிப்போயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிட வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில், முன்னாள் முK. Balakrishnanதலமைச்சர் கருணாநிதியால் வளர்த்தெடுக்கப்பட்ட உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழில் உயர் ஆய்வுகளைச் செய்து கருவி நூல்களை உருவாக்குவதே இந்நிறுவனத்தின் முதன்மையான பணியாக இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நிறுவனத்தின் ஆய்வுச் சூழல் முற்றிலும் முடங்கிப் போனது. நிறுவனத்தின் ஆய்விற்குத் தொடர்பில்லாத திருக்குறள் காட்சிக் கூடம், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் போன்றவற்றைத் திணித்து ஆய்வு நிறுவனத்தைக் கண்காட்சிக் கூடமாக மாற்றியதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி முற்றிலும் தடைப்பட்டுப் போனது எனத் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், தற்போது, பல ஆய்வுகள் இருக்கைகளை உருவாக்கி முறையற்ற வழியில் அரசு மற்றும் நிறுவனத்தின் லட்சினையை பயன்படுத்தி சான்றிதழ்கள் வழங்குவது, திருமூலர் ஆய்வறிக்கையின் மூலம் தமிழகம் முழுவதும் வகுப்புகள் எதுவும் நடத்தாமல் முறையற்ற வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவதாகவும், இப்படி பல்வேறு நிர்வாக சீர்கேடுகளால் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தன் பெருமையை இழந்து நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாடு முதலமைச்சர் இந்நிறுவனத்தை உயர் ஆய்வு நிறுவனமாக மாற்றுவதற்கும், இதுகாறும் நடைபெற்று வரும் முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்தி அக்குழு அளிக்கும் சிபாரிசுகள் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் சிறப்பாகச் செயல்பட, இந்நிறுவனத்திற்கு இயக்குநராக மூத்த பேராசிரியர் ஒருவரையே நியமிப்பது பொருத்தமானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள அவர், நிறுவன வளர்ச்சிக்குத் தேவையான கோரிக்கைகள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதுடன், மாணவர்கள் விடுதியில் உரிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றி மாணவர்கள் ஆய்வு செய்வதற்கான நல்ல சூழலை உருவாக்கித் தர வேண்டுமென அவர் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.