உலகக்கோப்பை தொடர்: பாகிஸ்தானுக்கு 153 ரன்கள் இலக்கு

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு 153 ரன்களை நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.   உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து…

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு 153 ரன்களை நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கான்வே உடன் அணியின் கேப்டன் வில்லியம்சன் கைகோர்ந்து நிதானமான ஆட்டத்தை இரண்டுபேரும் வெளிப்படுத்தினர். பின்னர் கான்வே ரன் அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து களமிறங்கிய பிலிப்ஸ் 6 ரன்களில் வெளியேறினார். ஆனால் ஒருபக்கம் வில்லியம்சன் மற்றும் மிட்செல் இருவரும் சிறப்பான விளையாட்டை கொடுத்தனர்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் 53 ரன்களும், வில்லியம்சன் 46 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் அரையிறுதியில் வெற்றி பெறலாம் என்ற துடிப்போடு பாகிஸ்தான் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.