புடவையுடன் 30 நாடுகளுக்கு பைக் ரைட் செல்லும் பெண்

இந்திய கலாசாரத்தை பிரபலப்படுத்துவதற்காக புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் புடவைக் கட்டிக் கொண்டு பைக்கில் 30 நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளார். இந்திய கலாசாரம் மிகவும் தொன்மையானது. டிஜிட்டல் யுகத்தை நோக்கி நகர்ந்தாலும் நம்…

இந்திய கலாசாரத்தை பிரபலப்படுத்துவதற்காக புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் புடவைக் கட்டிக் கொண்டு பைக்கில் 30 நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளார்.

இந்திய கலாசாரம் மிகவும் தொன்மையானது. டிஜிட்டல் யுகத்தை நோக்கி நகர்ந்தாலும் நம் கலாசாரத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் ஏராளம். அப்படி ஒருவர் தான் மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த சமூக தொழில்முனைவோர் ரமிலா லட்பிட். இவர் இந்திய கலாசாரத்தை உலகம் முழுவதும் எடுத்து செல்ல மிகப்பெரிய பயணத்தை மேற்கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கிராம பெண்களுடன் மகளிர் தினம் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்!

அதன் படி தனது ஹோண்டா பைக்கில் சுமார் 20 -30 நாடுகளுக்கு, 1 லட்சம் கி.மீ பயணிக்க உள்ளாராம். பாரம்பர்யமிக்க மராத்தி புடவையில் இந்தப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்பதுதான் ஹைலைட். மும்பையில் உள்ள இந்திய நுழைவுவாயிலில் இருந்து இன்று மாலை 4.30 மணியளவில் அவர் தன் பயணத்தைத் தொடங்க உள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் சிண்டே உள்ளிட்டோர் இவரின் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓராண்டுக்கு இந்தப் பயணத்தைத் தொடரவுள்ள ரமிலா, 2024 மார்ச் 8ம் தேதி இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளார். இந்திய மற்றும் மகாராஷ்டிராவின் தனித்துவமிக்க கலாசாரத்தை உலகறிய செய்வதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்கிறார் ரமிலா.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.