இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி, தனி விமானத்தில் நேற்று ஜெய்ப்பூர் வந்தது. இந்திய அணி, ரோகித் சர்மா தலையில் டி-20 போட்டியில் களமிறங்குகிறது.
பயிற்சியாளராக பதவியேற்றுள்ள ராகுல் டிராவிட் தலைமையில், முதன்முதலாக இந்திய அணி களமிறங்க இருக்கிறது. முதல் டி-20 போட்டி நாளை நடக்கிறது. இந்திய அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார். நவம்பர் 25-ம் தேதி தொடங்க இருக்கும் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், டி20 தொடரில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.