தன்னை சிறந்த நடிகைக்கான விருதுக்காக பரிந்துரைத்த பிலிம்பேருக்கு எதிராக வழக்கு தொடருவேன் என பிரபல பாலிவுட் நடிகை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் 2006ம் ஆண்டு முதல் திரையுலகில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தேசிய விருதுகள், பிலிம்பேர் என பல விருதுகளை வாங்கியுள்ளார் நடிகை கங்கனா.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் பிறகு விவசாயிகள் போராட்டத்தின் போது அவர்களை பயங்கரவாதிகள் என பேசியது, சமஸ்கிருதமே இந்தியாவின் தேசிய மொழி என்றது, இந்தியாவிற்கு வழங்கப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை என கூறியது என்று தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை பேசி வருகிறார். இவரது சர்ச்சை கருத்துக்காக ட்விட்டர் நிறுவனம் கங்கனாவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது.
இதனை தொடர்ந்து கங்கனா பிலிம்பேர் அமைப்பிடம் புதிய பிரச்சனையை துவங்கியுள்ளார். மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படமான ‘தலைவி’ திரைப்படத்தில் கதாநாயகியாக கங்கனா நடித்துள்ளார். இதில் சிறப்பாக நடித்ததற்காக 67வது பிலிம்பேரில் சிறந்த நடிகைக்கான பட்டியலில் தேர்வாகி இருந்தார். நெறிமுறையற்ற, ஊழல் மற்றும் முற்றிலும் நியாயமற்ற நடைமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வரும் பிலிம்பேர் போன்றவற்றை, நான் தவிர்த்து வருகிறேன். இருந்தாலும் அவர்களது விருது விழாவில் பங்கேற்கும்படி எனக்கு தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணம் உள்ளது.
இதனால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளேன் என கங்கனா அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை அறிந்து தற்போது சிறந்த நடிகைக்கான பரிந்துரையில் இருந்து கங்கனாவின் பெயரை நீக்கியுள்ளதாக பிலிம்பேர் தெரிவித்துள்ளது. மேலும், தங்களது நற்பெயரை கெடுக்கும் வகையிலான அவரது குற்றச்சாட்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கையை முன்னெடுக்க, தங்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது என பிலிம்பேர் குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஆஸ்கர், எம்மி போன்ற விருது விழாக்களையும் புறக்கணிக்க வேண்டும் என கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.