ஒருவர் வெறும் கைகளால் பெரிய முதலைக்கு உணவளிக்கும் வீடியோ வைரலாகி, இணையத்தைத் திகிலடையச் செய்துள்ளது.
உயிரியலாளரும் வனவிலங்கு பாதுகாவலருமான கிறிஸ்டோபர் ஜில்லெட்டால் பகிரப்பட்ட காணொளியில், ஒரு சிறிய குளத்தில் உள்ள ஒரு பெரிய முதலைக்கு வெறும் கைகளைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தாமல் அமைதியாக ஒரு வான்கோழி காலை வழங்குவதைக் காணொளி காட்டுகிறது.
காணொளியில், ராட்சத முதலை மெதுவாக நெருங்குகிறது, அதன் தாடைகள் அகலத் திறந்தன, அப்போது அவர் பயமின்றி அதற்கு உணவளிக்கக் கையை நீட்டுகிறார். கண் இமைக்கும் தருனத்தில் அந்த முதலை வான்கோழியின் காலை விழுங்குகிறது. ஆனால் அவர் எந்த பயத்தையும் காட்டவில்லை.
இந்த துணிச்சலான காட்சியானது பாதுகாப்பார்களின் பக்கத்தில் பகிரப்பட்ட பல ஆபத்தான காணொளிகளில் இதுவும் ஒன்றாகும். இது ஆபத்தான ஊர்வனவற்றுடன் நெருங்கிய சந்திப்புகளைக் காண்பிப்பதற்காக அவர் அந்த பக்கத்தில் பதிவுகளைப் பதிவிடுகிறார்.







