29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

சென்னையில் பரவலாக மழை; ட்விட்டரில் ட்ரெண்டான #ChennaiRains ஹேஷ்டேக்!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும்  மழை பெய்து வரும் நிலையில் வெயிலால் சிரமப்பட்டு வந்த பொதுமக்கள் ஜில்ஜில் வானிலையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வரவே சிரமப்பட்டனர். குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவ – மாணவிகள் வெயிலில் இருந்து தப்பித்து பாதுகாப்புடன் இருக்க கோடை விடுமுறை நாட்களும் நீட்டிக்கப்பட்டது. மேலும் சென்னை மட்டுமின்றி வேலூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில், தெற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அநேக இடங்களில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.

அதேபோல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8 மணி முதலே கிண்டி, வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கள், வடபழனி, பல்லாவரம், குன்றத்தூர், எழும்பூர், கோயம்பேடு, அம்பத்தூர், விருகம்பாக்கம், கே.கே.நகர், ஆழ்வார்பேட்டை, கொரட்டூர், உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த மழையினால் கோடை வெப்பம் சற்று தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து, நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யும் என்று கூறியுள்ளது. வருகிற 21-ம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் ட்விட்டரில் #ChennaiRains என்றா ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading