இன்றைய சூழலில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் ஓர் அரசியல் தலைவர் தான் “வொலாடிமிர் ஜெலன்ஸ்கி” . யார் இந்த “வொலாடிமிர் ஜெலன்ஸ்கி”! என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை .
1978-ல் சோவியத் யூனியனில் அங்கமாக இருந்த க்ரிவி ரிஹில் பிறந்த வொலாடிமிர் ஓலெக்ஸாண்ட்ரோவிச் ஜெலன்ஸ்கி, யூத பின்னணி குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜெலன்ஸ்கியின் பள்ளிப்படிப்பு முதல் ஆரம்ப வாழ்க்கை முழுவதும் ரஷ்ய மொழியியை சுற்றியே இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொருளாதாரம், சட்டம் என இரண்டு படிப்புகளை முடித்திருந்தாலும், ஜெலன்ஸ்கி கலைகளிலேயே அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்; அந்த ஆர்வம் அவரை நகைச்சுவை நாடக குழுக்களில் சேர வழிவகுத்தது. கீவ் தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போதே நாடகங்களில் பங்கேற்கத் தொடங்கினார். ஜெலன்ஸ்கி மற்றும் மற்ற நடிகர்கள் ‘குவார்டல் 95’ என்ற குழுவை உருவாக்கி நகைச்சுவை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்;
மேடை நிகழ்ச்சிகளாகத் தொடங்கி 2003-ல் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி செய்யும் அளவுக்கு ‘குவார்டல் 95’ குழுவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், நாடகங்களில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் தற்கால அரசியல் சூழல்களை நையாண்டிகளாக்கி மக்களை சிரிக்க வைத்தனர். இந்த அரசியல் நையாண்டியின் மூளை ஜெலன்ஸ்கியே.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் அதிபராக ஒரு காமெடி ஷோவில் நடித்தபோது, தனது தேசம் சந்தித்து வரும் இந்த நூற்றாண்டின் கொடிய போர்களில் ஒன்றை வழிநடத்துவோம் என ஜெலன்ஸ்கி எண்ணியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், அரசியல் நகர்வுகள், அந்த மோசமான நிலைக்கு அவரைத் தள்ளியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘குவார்டல் 95’ குழு ‘மக்கள் சேவகன்’ என்ற அதே பெயரில் கட்சியாக உருமாறும் அளவுக்கு அந்த நிகழ்ச்சியின் மூலமாக ஜெலன்ஸ்கி அபரிமிதமான புகழ்பெற்றார். இறுதியாக அதிபர் வேட்பளராகவும் தேர்தல் அரசியலுக்குள் புகுந்தார். பிரச்சாரங்களில் பெட்ரோ பொரோஷென்கோவின் ஆட்சியை தனது வழக்கமான அரசியல் நையாண்டி பாணியில் வறுத்தெடுத்தவர், யூடியூப் போன்ற சமூக ஊடங்கங்கள் வாயிலாக உக்ரேனிய இளைஞர்களையும், மக்களையும் கவர்ந்தார்.
ரஷ்யாவுடனான சிக்கல்களை முடிவுக்குக் கொண்டுவருவதும், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளை சமாதானப்படுத்துவதும் உக்ரைனியர்களின் நீண்டகால கோரிக்கைகள். ஜெலன்ஸ்கி அதிபர் தேர்தலில் இதை முக்கிய வாக்குறுதியாக மாற்றினார். எதிர்பார்த்து போலவே மிகப்பெரிய வெற்றி. 73 சதவீத வாக்குகளைப் பெற்று உக்ரைனின் ஆறாவது அதிபராக 2019-ல் அரியசானத்தை கைப்பற்றினார் .இளம் அதிபராக வலம் வந்த இவர் தற்போது சந்தித்து கொண்டுயிருக்கும் சாவல்களை உலகமே உற்று நோக்கிகொண்டு உள்ளது.
அவரின் உருக்கமான பேச்சு “ரஷ்யாவின் முதல் இலக்கு நான் தான். இரண்டாவது இலக்கு எனது குடும்பம். நான் இன்னும் தலைநகர் கீவில்தான் இருக்கிறேன். என் குடும்பம் இன்னும் உக்ரைனில் தான் உள்ளது. ரஷ்யப் படைகளின் இலக்கு நாங்கள்தான் என்று தெரிந்தும் இங்கேயே இருக்கிறோம். என்ன நடந்தாலும் எனது மக்களை கைவிட மாட்டேன். இங்கேயே தான் தொடர்ந்து இருப்பேன்” என்று அரசியல் அனுபவம் அதிகம் இல்லாத ஒரு தலைவராக அறியப்படும் ஜெலன்ஸ்கி இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே தனது முதிர்ச்சியான பேச்சுக்களால் கவனம் ஈர்த்து வருகிறார்.