ஓ.பன்னீர் செல்வத்தை சந்திப்பது என்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு வி.கே.சசிகலா பதிலளித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் அமைந்துள்ள இல்லத்தில் வி.கே.சசிகலா தனது ஆதரவாளர்களை சந்தித்தார். கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவாளர்களை சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.சசிகலா, தொண்டர்கள் ஒரே எண்ணத்துடன் உள்ளனர். கட்சி ஒன்றாக வேண்டும், நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளனர்.
கோவையில் இலவச டிக்கெட் வேண்டாம் என்று கூறிய மூதாட்டி வழக்குப்பதிவு குறித்த கேள்விக்கு, இது தவறான விசயம். இதில் அமைச்சர்களுக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது. சாதாரண ஒரு பெண் மீது வழக்குப்பதிவு செய்வது கண்டனத்திற்குரியது என்று கூறினார்.
ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாகவே மழைநீர் வடிகால் பணிகளை முடித்திருக்க வேண்டும். அரசு சொன்ன மாதிரி தற்போது நடைபெறும் பணிகள் முடியுறது ரொம்ப கஷ்டம். இரவு, பகல் என தொடர்ச்சியாக வேலை நடந்தால் மட்டுமே குறிப்பிட்ட நாட்களுக்குள் பணியை முடிக்க முடியும்.
ஓ.பி.எஸ்ஸுடன் சந்திப்பு? குறித்த கேள்விக்கு, ஓபிஎஸ்ஸை சந்திப்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் ஒன்று தான். பிரித்துப் பார்க்க நினைக்கவில்லை என்றார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களுடன் பேசி வருகிறார்களா? என்ற கேள்விக்கு, இவ்வளவு கேமராவை வைத்துக் கொண்டு உங்களிடம் எப்படி சொல்ல முடியும் என்று கூறினார். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடமிருந்து பெங்களூரு சிறைச்சாலைக்கு கடிதம் வந்தது. எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
ராகுல் காந்தி நடைபயணம் குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு கட்சியும் 2024 தேர்தலுக்காக முயற்சிகளை செய்து வருகிறார்கள். அதில் ஒன்று தான் காங்கிரசின் ஒற்றுமை நடைபயம் என்று குறிப்பிட்டார்.
தேர்தல் என்பது வேறு, அரசு என்பது வேறு. மத்திய அரசிடம் எதையும் கேட்டுப்பெறுவதற்கு உரிமை 100% உள்ளது. எப்போதுமே சண்டபோடுவதற்காக வாக்களிக்கவில்லை. நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.