முக்கியச் செய்திகள்செய்திகள்சினிமா

சூர்யா 44 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது? – வீடியோ வெளியிட்டு மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!

சூர்யா 44 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது எனவும் எங்கே தொடங்க உள்ளது எனவும் வீடியோ வெளியிட்டு புதிய அப்டேட்டை படக்குழு வழங்கியுள்ளது.

நடிகர் சூர்யாவின் 44வது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சூர்யா மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சூர்யா 44 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இவர் முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் அந்தமானில்  தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமானில் உள்ள போர்ட் பிளேரில் படப்பிடிப்பு தொடங்குவதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

“எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக்கூடாது என கவனம் செலுத்தினேன்” – மாணவர் சின்னதுரை பேட்டி!

Web Editor

கத்தாரில் நடந்தது என்ன..? மீட்கப்படுவார்களா இந்திய முன்னாள் அதிகாரிகள்..?

Web Editor

நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்களை உடனே அகற்ற வேண்டும் – வாகன ஓட்டிகளுக்கு மே. 1ம்தேதி வரை கெடு!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading