முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை அரசமைப்புச் சட்டப் பிரிவு 142வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் விடுதலை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்பு, இந்த வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைதத்தது. எனினும், அவரின் விடுதலை மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்தும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. “அமைச்சரவை எடுத்த முடிவை ஆளுநர் ஏற்றிருக்க வேண்டும். பேரறிவாளனை விடுதலை செய்ய உரிய பரிசீலனைக்குப் பின் மாநில அரசு முடிவு செய்தது. ஆனால் ஆளுநர் இதை ஏற்காமல் இருந்தார். 28 மாதங்கள் இதில் முடிவு எடுக்காமல் இருந்தது தவறு. அரசியல் சாசனத்தின் 161-வது மாநில அரசுக்கான சிறப்புரிமையை கொண்டது; ஆளுநர் இதற்கு கட்டுப்பட்டவர்; மீறி நடப்பது தவறு. அவர் காலதாமதம் செய்தது தவறு” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
161வது சட்டப் பிரிவு என்றால் என்ன? அது என்ன சொல்கிறது? என்று பார்க்கலாம்.
அரசமைப்புச் சட்டம் 161வது பிரிவின் படி, மாநில ஆளுநர் குற்றவாளிகளின் தண்டனையை ஒத்தி வைக்கவும், தள்ளி வைக்கவும் மற்றும் குறைக்கவும் அதிகாரத்தை வழங்குகிறது. எனினும், மரண தண்டனையை முழுமையாக மன்னிக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு இல்லை.
குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவையில் இயற்றப்படும் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துவிட்டால் அதன் பிறகு ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை. குடியரசுத் தலைவர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.