தட்டச்சர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டதா?-தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

7வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில், 2009ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டதா? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்…

7வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில், 2009ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டதா? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட ஊதிய உயர்வு சலுகை வழங்கக் கோரி வேளாண் துறை தட்டச்சர், சுருக்கெழுத்தர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7வது ஊதியக் குழுவின்படி 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி அரசாணைகளில் 2009ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்படவர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணைக்கு முரணாக உள்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம், நிதி உள்ளிட்ட துறைகளில் பணியில் சேர்ந்த 4500 பேருக்கு சலுகை வழங்கியது போல, தங்களுக்கும் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

2010 பிறப்பிக்கப்பட்ட அரசாணை என்பது 2009 ஜூன் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கு பொருந்தாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 7வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில், 2009ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டதா? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.