திரேந்திர சாஸ்திரியின் அணிவகுப்பின் போது ‘அவுரங்கசீப் ஜிந்தாபாத்’ கோஷங்கள் எழுப்பப்பட்டதா?

This News Fact Checked by BOOM திரேந்திர சாஸ்திரியின் அணிவகுப்பின் போது ‘அவுரங்கசீப் ஜிந்தாபாத்’ கோஷங்கள் எழுப்பப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். பூம் உண்மையைச் சரிபார்த்ததில், வைரலான…

Were 'Aurangzeb Zindabad' slogans raised during Tirendra Shastri's march?

This News Fact Checked by BOOM

திரேந்திர சாஸ்திரியின் அணிவகுப்பின் போது ‘அவுரங்கசீப் ஜிந்தாபாத்’ கோஷங்கள் எழுப்பப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

பூம் உண்மையைச் சரிபார்த்ததில், வைரலான வீடியோ மகாராஷ்டிராவைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்தது, அங்கு அவுரங்காபாத் சென்ட்ரலில் போட்டியிடும் ஜாவேத் குரேஷியின் ஆதரவாளர்கள் பிரச்சாரத்தின் போது கோஷங்களை எழுப்பினர்.

கதாசிரியரும், பாகேஷ்வர் தாம் திரேந்திர சாஸ்திரியுமான பீடாதீஸ்வரரின் ‘இந்து ஏக்தா பாதயாத்திரை’யின் மத்தியில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பகிரும் பயனர்கள், திரேந்திர சாஸ்திரியின் பாதயாத்திரையின் போது முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப்பின் படத்துடன் கோஷங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறுகின்றனர்.

BOOM உண்மையைச் சரிபார்த்து, வைரலான வீடியோவில் கூறப்படுவது தவறானது என்பதைக் கண்டறிந்தது. மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அவுரங்காபாத் சென்ட்ரல் தொகுதியில் போட்டியிடும் ஜாவேத் குரேஷியின் ஆதரவாளர்கள் தேர்தல் ரோட் ஷோவின் போது கோஷங்களை எழுப்பினர்.

கதைசொல்லி திரேந்திர சாஸ்திரி நவம்பர் 21 முதல் இந்து ஏக்தா பாதயாத்திரையில் இருந்தார். இந்த பாதயாத்திரை நவம்பர் 29-ம் தேதி வரை நடைபெற்றது. அப்போது அவர் மத்திய பிரதேசத்தில் உள்ள பாகேஷ்வர் தாம் முதல் ஓர்ச்சா வரையிலான 160 கி.மீ பயணத்தில் இருந்தார்.

சமூக ஊடக தளமான ட்விட்டரில் சரிபார்க்கப்பட்ட பயனர் ஒருவர் வைரல் வீடியோவை பகிர்ந்து, “முஸ்லீம்கள் ஔரங்கசீப்பின் புகைப்படத்தைக் காட்டி, பாகேஷ்வர் பாபா திரேந்திர சாஸ்திரியின் பாதயாத்திரையான ஔரங்கசீப் தேரா பாப், ஔரங்கசீப் தேரா பாப் என்ற கோஷங்களை எழுப்பினர். இந்துக்கள் மிகுந்த அமைதியைக் காட்டினர். அவர்கள் எவ்வளவு கலவரத்தை தூண்டினார்கள். ஆனால் இந்துக்கள் பாதயாத்திரையில் அமைதியாக நடந்துகொண்டார்கள் என்பதை நீங்களே காணொளியில் பார்க்கலாம்.” (பதிவின் காப்பக இணைப்பு) என பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவும் அதே கூற்றுடன் சமூக ஊடக தளமான பேஸ்புக்கில் வைரலானது. (பதிவின் காப்பக இணைப்பு)

உண்மைச் சரிபார்ப்பு: வைரலாகும் வீடியோ மகாராஷ்டிரத் தேர்தலைச் சேர்ந்தது

வைரலான வீடியோவை ஆராய, வீடியோவின் முக்கிய பிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வீடியோ நவம்பர் 18, 2024 அன்று ஜாவேத் குரேஷி என்ற பேஸ்புக் கணக்கில் பதிவேற்றப்பட்டதைக் கண்டறியப்பட்டது.

அதன் தலைப்பு, “அவுரங்காபாத் மத்தியிலிருந்து வாஞ்சித் வேட்பாளர் ஜாவேத் குரேஷியின் பேரணியில், பிரதீப் ஜெய்ஸ்வால் நேருக்கு நேர் மோதிக்கொண்டார்” என குறிப்பிடப்பட்டிருந்தது. அவுரங்கசீப் (rh) புகைப்படத்தை காட்டி ஜிந்தாபாத் கோஷங்களை எழுப்பியதன் மூலம் திரேந்திர சாஸ்திரியின் பாதயாத்திரை தொடங்கும் முன்பே இந்த வீடியோ இணையத்தில் இருந்தது உறுதியானது.

இதைத் தொடர்ந்து, இந்த வீடியோவை கவனமாகப் பார்த்தபோது, ​​ஒரு பக்கம் சிலர் திப்பு சுல்தான், ஔரங்கசீப் படத்துடன் முழக்கங்களை எழுப்ப, மற்றொரு பக்கம் நின்று கொண்டு சத்ரபதி சிவாஜி மகாராஜ் கி ஜே என்று கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இதுதவிர ஜாவேத் குரேஷிக்கு வாக்களியுங்கள் என்ற வாசக அட்டைகளையும் சிலர் கையில் ஏந்தியபடி உள்ளனர். மேலும், மறுபுறம் ஓடும் வாகனங்களில் சிவசேனா (ஷிண்டே பிரிவு) மற்றும் பாஜக கொடிகள் உள்ளன.

கூகுளில் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளை தேடியபோது, ​​அவுரங்காபாத் அப்டேட்ஸ் என்ற யூடியூப் சேனலில் இது தொடர்பான வீடியோ கிடைத்தது. இந்த வீடியோவின் தலைப்பு, “அவுரங்காபாத் சென்ட்ரல்: ஜாவேத் குரேஷியின் பைக் பேரணிக்கு ஆர்வலர்கள் அவுரங்கசீப்பின் புகைப்படத்துடன் வந்து, ஜிந்தாபாத் கோஷங்களை எழுப்பினர்.” என இருந்தது. இந்த வீடியோவிலும் மக்கள் ஔரங்கசீப் மற்றும் திப்பு சுல்தான் படங்கள் அடங்கிய அட்டைகளை கையில் வைத்திருப்பதை காணலாம்.

சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில், சிவசேனாவைச் சேர்ந்த பிரதீப் சிவநாராயண் ஜெய்ஸ்வால் (ஷிண்டே) அவுரங்காபாத் (மத்திய) தொகுதியில் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியான வஞ்சித் பகுஜன் அகாடியின் வேட்பாளர் முகமது ஜாவேத் குரேஷி நான்காவது இடத்தில் இருந்தார்.

வீடியோவை உறுதிப்படுத்த, அவுரங்காபாத்தில் (மத்திய) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., பிரதீப் சிவநாராயண் ஜெய்ஸ்வாலை BOOM தொடர்பு கொண்டது. அவர், “இந்த வீடியோ அவுரங்காபாத்தில் உள்ள எங்கள் சாலை நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். சாலையின் ஒருபுறம் எனது ஆதரவாளர்கள், மறுபுறம் ஜாவேத் குரேஷியின் ஆதரவாளர்கள் உள்ளனர்.

அவுரங்கசீப் மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் பதாகைகளை ஏந்தியவர்கள் ஜாவேத்தின் ஆதரவாளர்கள். நாங்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜைப் பின்பற்றுபவர்கள். நாங்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜ் கி ஜே என்ற கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தோம், அவர்கள் ஔரங்கசீப் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டனர். இதில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. நாங்கள் அமைதியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினோம். மேலும், இந்த விவகாரத்தில் போலீஸில் புகார் எதுவும் வரவில்லை” என்று பிரதீப் சிவநாராயண் ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தினார்.

முடிவு:

வைரலான வீடியோ மகாராஷ்டிராவைச் சேர்ந்தது எனவும், அங்கு அவுரங்காபாத் சென்ட்ரலில் போட்டியிடும் ஜாவேத் குரேஷியின் ஆதரவாளர்கள் பிரச்சாரத்தின் போது கோஷங்களை எழுப்பினர் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘BOOM’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.