சூழல் வரும்போது தேசிய ஆட்சியை கொண்டு வர முயற்சிப்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து பல நாட்கள் ஆன நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் விடுபட்ட மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துக்கொண்டு இடப்பங்கீடு குறித்து கலந்தாலோசித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சூழல் வரும்போது தேசிய ஆட்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி எப்போதும் நாம நினைக்கின்ற அளவுக்கு தேர்தல் பயணங்கள் சுமூகமாக இருக்காது.
எப்படி பயணம் செய்ய வேண்டும் என தெரிந்ததால் சுமூகமாக பயணம் காங்கிரசின் சிந்தனை, எங்களின் நடைமுறை அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதே காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலட்சியத்தை கைவிடவில்லை. சூழல் வரும்போது தேசிய ஆட்சியை கொண்டு வர முயற்சிப்போம். சிறந்த தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். ஆட்சிக்கு எங்கள் ஆதரவை கொடுக்கிறோம்.
தமிழகத்தில் ஆரோக்கியமான கூட்டணியை உருவாக்கியுள்ளோம் இயற்கையான அம்சங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் பேச்சுவார்த்தை என்று வந்தால் வருத்தங்களும் இருக்கும், மகிழ்ச்சியும் இருக்கும் நேர்முக சிந்தனையோடு எல்லாவற்றையும் அணுகுகிறோம்.” என்று கூறினார்.