நடிகர் விஜய் இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ சொகுசு காருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஜய், கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து பிம்டபிள்யூ எக்ஸ் 5 என்ற சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்துவதற்கு தாமதம் செய்ததற்காக 400 சதவீத அளவிற்கு வணிகவரித் துறை அபராதம் விதித்தாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு மீது நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில், மனு மீதான விசாரணை முடியும்வரை அபராதத்தை வசூலிக்க எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும்,
நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை வணிக வரித்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி சரவணன் தனது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார்.
விஜய் ஏற்கெனவே ரோல்ஸ் ராயல்ஸ் கார் விவகாரத்தில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








