30.8 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் உலகம்

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை தினசரி வெளியிடமாட்டோம்- சீனா அதிரடி முடிவு

கொரோனாவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கையை இனி வெளியிடமாட்டோம் என சீன அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தொடர்ந்து உலக நாடுகளில் பரவிய கொரோனா உலகையே ஆட்டி படைத்தது. பின்னர் பல்வேறு கொரேனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளது. தினமும் 10 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே கடந்த 20 நாட்களில் 25 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

ஆனால் சீனா கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்களை சரியாக அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை குறைத்து சீன அரசாங்கம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. சீனாவில் தினசரி கொரோனா பாதிப்புகளை அந்நாட்டின் தேசிய சுகாதார மையம் வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் சீனா, இன்று முதல் தாங்கள் கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை வெளியிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. இனி கொரோனா பாதிப்பு தகவல்கள் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மாற்றத்திற்கான காரணங்களை குறிப்பிடவில்லை. அதேபோல் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எப்படி கொரோனா தகவல்களை அளிக்கும் என்பது குறித்தும் கூறப்படவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading