எம்ஜிஆர் ஜெயலலிதா இருவருக்கும் வாரிசு இல்லை. நாம் தான் அதிமுகவிற்கு வாரிசு என எஸ்.டி.சோமசுந்தரம் நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி உருக்கமாக பேசினார்.
முன்னாள் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றிய எஸ்.டி சோமசுந்தரம் நூற்றாண்டு விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இந்த நூற்றாண்டு விழாவில் எஸ்.டி சோமசுந்தரமின் சிலை திறப்பு மற்றும் அவருடைய வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு, எஸ்.டி.எஸ் அறப்பணி அறக்கட்டளை துவக்கம், சகுந்தலா சோமசுந்தரம் பெயரில் கட்டிட திறப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் எடப்பாடி பழனிச்சாமி எஸ்.டி சோமசுந்தரம் சிலையை காணொளி மூலம் திறந்து வைத்தார். மேலும் எஸ்.டி சோமசுந்தரம் வாழ்க்கை வரலாறு நூலை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதனை தொடர்ந்து சகுந்தலா சோமசுந்தரம் பெயரில் கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழாவை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்தல்லி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு, பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி எஸ்.டி சோமசுந்தரம் நூற்றாண்டு விழா தான். எஸ்.டி சோமசுந்தரத்திற்கு சிலை திறந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.க்கு உறுதுணையாக இருந்தவர் எஸ்.டி. சோமசுந்தரம்.
உழைப்பாளர்கள் நிறைந்த இயக்கம் அதிமுக இயக்கம் தான். உழைப்பாளர்களால் உயர்ந்த கட்சி அதிமுக. அதிமுக ஆட்சியில் இருக்கும் போது ஏழை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்பட்டது. 19 வயதில் கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும் போது தான் எம்.ஜி.ஆரின் ரசிகனாக இருந்தேன். எம்ஜிஆர் ஜெயலலிதா இருவருக்கும் வாரிசு இல்லை. நாம் தான் அதிமுகவிற்கு வாரிசு. அதிமுகவையும் காப்போம், மக்களையும் காப்போம் எனவும் தெரிவித்தார்.