மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு! சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் அனுமதி!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட கோம்பைதொழு அருகே அமைந்துள்ளது…

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட கோம்பைதொழு அருகே அமைந்துள்ளது மேகமலை அருவி. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுகடந்த வாரம் இந்த அருவி வறண்டு போனது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக மேகமலை அருவியில் நீர் வரத்து அதிகரித்து நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் மேகமலை வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால் தேனி,  மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மீண்டும் மேகமலை அருவிக்கு
படையெடுக்க துவங்கியுள்ளனர்.

—அறிவுச்செல்வன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.