29.4 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வியாசர்பாடி தூய ஆரோக்கிய அன்னை திருவிழா :  தேர்பவனி கோலாகலம்!

சென்னை  வியாசர்பாடி தூய ஆரோக்கிய அன்னை திருச்சபை திருவிழா முன்னிட்டு  நடைபெற்ற தேர்பவனி ஏராளமான கிறிஸ்துவ மக்கள் பங்கேற்றனர். 
சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரில்  அமைந்துள்ள தூய ஆரோக்கிய அன்னை திருத்தளத்தில் 58 ஆம் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த பத்து நாட்களாக  திருப்பலி, தேர் வீதி உலா, அன்னதானம் நடைபெற்று வந்தது. இந் நிலையில் முக்கிய நிகழ்வாக தேர்பவனி நேற்று நடைபெற்றது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தேர் ஊர்வலமாக சென்றது.  முன்னதாக மாதவின் கொடி ஆராதனை முழங்க இறக்கப்பட்டது.
இதில் அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்துவ  மக்கள்  திரளாக கலந்துகொண்டனர் அப்போது பலூன்களை பறக்கவிட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram