இந்திய-ரஷிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புதின் இன்று பிற்பகல் இந்தியா வருகிறார்.
இந்திய-ரஷிய உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க டெல்லி வரும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை, மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் இரு தலைவர்களும், உயர்மட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் இரு நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. மேலும் இந்தப் பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
மாநாட்டுக்கு முன்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜெய் லவ்ரோ (Sergey Lavrov)வும் சந்தித்து பேசுகிறார்கள். பின்னர் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ரஷிய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜெய் ஷோய்குவும் சந்தித்து பேசுகின்றனர். பின்னர் இந்த 4 அமைச்சர்களும் பங்கேற்கும் 2+2 பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்தச் சந்திப்புகளில் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதில் பங்கேற்க ரஷ்ய அமைச்சர் செர்ஜேய் லவ்ரோவ் இன்று அதிகாலை டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு வந்தார். அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.