விருதுநகரில் கல்கிடங்கில் தவறி விழுந்து ஒன்றரை வயது சிறுவன் பலி!

விருதுநகரில் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை கல் கிடங்கில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அருகே கருப்பசாமி நகர் பகுதியைச் சார்ந்தவர் பாலமுருகன் இவருடைய…

விருதுநகரில் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை கல் கிடங்கில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருகே கருப்பசாமி நகர் பகுதியைச் சார்ந்தவர் பாலமுருகன் இவருடைய மனைவி நிவேதா. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு தர்சன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. 
வீட்டின் அருகில் ஒன்றரை வயது குழந்தை தர்ஷன் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்பொழுது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த சிறிய கல் கிடங்கில் குழந்தை விழுந்து நீரில் மூழ்கியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் குழந்தை தர்சனை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை
பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஊரகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.