புதுச்சேரியில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமெடுத்துள்ள நிலையில், 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் 16 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. ’இன்ஃபுளூயன்சா-ஏ’ வைரஸின் துணை வைரஸான ’H3N2’ வகையால் ஏராளமானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் இந்த வைரஸுக்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பெரும்பான்மையாக சிறுவர், சிறுமியர்களையே தாக்குகிறது. உடல்நலக்குறைவு ஏற்படுவதால் அவர்களால் பள்ளிகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது.
இதையும் படியுங்கள் : ”வெறுப்பை தூக்கி கடாசிவிட்டு முன்னோக்கி போய் விடுங்கள்!” – செல்வராகவன் அட்வைஸ்
இந்நிலையில், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவி வருவதால், புதுச்சேரியில் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, நாளை (16.03.2023) முதல் 26.03.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார்.