டி-20 கிரிக்கெட் ; விராட் கோலி அசத்தல் சாதனை

டி-20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் ரோகித் சர்மாவை முறியடித்து விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். நேற்று நடந்த ஆசிய கோப்பை டி-20 தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின.…

டி-20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் ரோகித் சர்மாவை முறியடித்து விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.

நேற்று நடந்த ஆசிய கோப்பை டி-20 தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

விராட் கோலிக்கு சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிக்கு இது 32 வது அரைசதம் ஆகும். இதுவரை அதிக அரைசதம் அடித்தவர் என்ற சாதனை பட்டியலில் ரோகித் சர்மா முதல் இடத்தில் இருந்து வந்த நிலையில், அந்த சாதனையை விராத் கோலி முறியடித்துள்ளார்.

அதன்படி, டி-20 அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் விராத் கோலி 32 ரன்கள் எடுத்து முதல் இடத்திலும், ரோகித் ஷர்மா 31 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்திலும் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.