நடிகை நயன்தாராவை வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி கரம்பிடித்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடைபெற்றது. அங்கு திருமணத்துக்காக பிரத்யேகமாக விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. திருமணம் நடைபெறும் பகுதியில் அனைத்து இடத்திலும் 80க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மடிப்பாக்கம் மீனாட்சி சுந்தரேஷ்வர் கோயில், சென்னை காளிகாம்பாள் கோயில், நங்கநல்லூர் கருமாரி அம்மன் கோயிலை சேர்ந்த 15 புரோகிதர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் இன்று காலை 10.25 மணியளவில் நடந்தது. புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்.
இந்த திருமணத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். மேலும் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், நடிகர் ஜெயம்ரவி, இயக்குநர் மோகன் ராஜா, கலா மாஸ்டர், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், நடிகை சரண்யா பொன்வண்ணன், பொன்வண்ணன், இயக்குநர் சிவா, கேமராமேன் வெற்றி, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, நடிகர் வசந்த், நடிகர் சரத்குமார், நடிகர் விஜய்சேதுபதி தனது மகளுடன் கலந்து கொண்டார்.
இதையும் படியுங்கள்: நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்
மேலும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, இயக்குநர் கௌதம் மேனன் ஆகிய முக்கிய திரையுலக பிரபலங்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து மணமக்களை வாழ்த்தினர்.








