வெனிசுலாவில் கடந்த 24-ஆம் தேதி அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அவை ரிக்டர் அளவில் முறையே 7.2 மற்றும் 7.5 ஆக பதிவாகியுள்ளது. பேரிடரின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தேசிய அவரசர நிலையை அந்நாட்டின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் பிரகனடப்படுத்தியுள்ளார்.
இதனிடையே வெனிசுலாவில் நிலநடுக்கப் பேரிடரில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருந்தனர். மேலும் பத்து ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். இதனிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 3,500-ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
அதன்படி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,330 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தில் 16,740 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல ஆயிரம் பேர் காணாமல் போய் உள்ளதாகவும், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு 17 நாட்களாகியும் தற்போது வரை மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.




