வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் பழுது காரணமாக 7 நோயாளிகள் உயிரிழந்தது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக மருத்துவக் கல்வி இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 7 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக
நாளிதழில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து விசாரணை மேற்கொள்கிறது.
இதையடுத்து 7 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.







