திருநெல்வேலி – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை செப்.24ம் தேதி தொடங்க உள்ளது.
இந்தியாவில் முழுவதும் பல மாநிலங்களில் வந்தேபாரத் ரயில் சேவை இயங்கி வருகிறது. இதன் ஒருபகுதியாக திருநெல்வேலியிருந்து சென்னை மாவட்டத்திற்கு வரும் 24ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் தொடக்க விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தெற்கு கோட்ட மேலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். வரும் செப்டம்பர் 24ஆம் தேதி நெல்லை ரயில் நிலையத்திலிருந்து காலை 11 மணிக்கு வந்தே பாரத் தரையில் சேவை தொடங்கி வைக்கப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு கோட்டை ரயில்வே மேலாளர் ஆனந்த் தெரிவித்ததாவது
“வரும் 24-ம் தேதி 11 மணி அளவில் நாட்டின் 9வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ள இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் அழைப்பது குறித்தான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளவதற்காக வந்துள்ளோம். இதன் அறிக்கை ரயில்வே அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்படும். “ என தெரிவித்தார்.
திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் பயணத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் சேவை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.