கோவை மாட்டத்திலுள்ள வால்பாறை பள்ளிகளுக்கு நாளை (ஜூலை 16) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் எதிரொலியாக வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நாளை மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.







