ஓய்வறியா சூரியன் கருணாநிதி, நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கடந்த 2018 ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார். அவரது 3-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் நடத்த திமுக நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், கொரோனா காரணமாகவும், தொற்று அதிகரித்து வருவதாலும் அவரவர் வீடுகள் முன்பு கருணாநிதி படம் வைத்து அஞ்சலி செலுத்துமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில்தில் அமைந்துள்ள கருணாநிதி நினை விடத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடன் துரை முருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி உட்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், காலத்தால் அழியாத வீர காவியம் கருணாநிதி என்றும் அறிவாசான் அண்ணாவின் வழித்தோன்றல் எனவும் கூறினார். சனாதன சக்திகள் தலைதூக்கும் போது கருணாநிதி நம்மை வழிநடத்துகிறார் எனவும் வைகோ தெரிவித்தார்.







